தமிழ் நிலத்தின் மிகப்பழமையான சாதிகளில் முதன்மையானது மறவர் சாதி என்பது உலக வரலாற்றில் எழுதப்பட்ட ஒன்றாகும். தென்பகுதிகளில் அடர்த்தியாக பரவி வாழக்கூடிய இச்சமூகத்தின் பண்பாடு, வழிபாடு, திருமண முறைகள் யாவும் சிறப்புக்குரியவைகள் ஆகும். முக்குலத்தோர் என பொதுவாக அழைக்கப்படும் கள்ளர், மறவர், அகமுடையார் சமூகங்களில் இரண்டிலும் இல்லாத ஓர் உயரிய அம்சமாக 'மறவர்களுக்கு மட்டும் கிளைகள்' என்கிற பகுப்புகள் உண்டு.
மறவர்களின் ஆணிவேராக பாதுகாக்கப்படும் கிளைகள் குறித்த அறிதலற்ற பலரும் அதனை சிதைக்கவும், கலப்பு சாதியினராக மாற்றவும் துடிக்கின்றனர். கொத்து, கிளை, கரை ஆகிய உட்பிரிவுகளால் தான் மறவர் சாதி இன்னும் உயிர்ப்போடு இருப்பதாக ஆய்வாளர்கள் நிரூபித்துள்ளனர். அத்தகைய மறவர்களின் கிளைகளாக முந்தைய ஆய்வாளர்கள் தொகுத்துள்ள பட்டியல் கீழே பதிவிடப்படுகிறது. மேலும், மறத்தமிழர் சேனை சார்பில் விரைவில் திருத்தப்பட்ட முழுமையான மறவர் கிளைகளும், கொத்துகளும், மறவர்களின் வாழ்விடங்களும் ஆய்வுக்குப் பிறகு வெளியிடப்படும்.
( முந்தைய ஆய்வாளர்கள் தொகுத்தவை: மறத்தமிழர் சேனை தொகுத்தது அல்ல )